Pages

Sunday, January 27, 2013

Moong dhal Laddu

Items :
            Moong Dhal - 200 Gram, Sugar -300 Gram, Ghee 100 Ml, Elaichi - little bit, Ghee fry Cashewnut -10

Way To Cook :
           Fry moong dhal in kadaai (Pan) in brownish, then grind that fried dhall in mixie next filter the flour. Grind the sugar then add grinded sugar and grinded dhall, add hot ghee put cashewnut and elaichi powder, mix it well and make a round shape.

Wednesday, January 23, 2013

Hickory Dickory, Humpty Dumpty Rhymes


Hickory, dickory, dock

Hickory, dickory, dock,
The mouse ran up the clock.
The clock struck one,
The mouse ran down,
Hickory, dickory, dock.


Humpty Dumpty

Humpty Dumpty sat on a wall.
Humpty Dumpty had a great fall.
All the king's horses and all the king's men
Could not put Humpty Dumpty together again!


Hush-a-bye baby

Hush-a-bye, baby,
On the tree top!
When the wind blows,
The cradle will rock.
When the bough breaks,
The cradle will fall.
Down will come baby,
Bough, cradle and all.



Ding dong bell rhymes


Ding, dong, dell

Ding, dong, dell,
Pussy's in the well.

Who put her in?
Little Johnny Thin.

Who pulled her out?
Little Tommy Stout.

What a naughty boy was that,
To try to drown poor pussy cat,

Who never did him any harm,
And killed the mice in his father's barn.

Baby Rhymes


Baa baa black sheep

Baa, baa, black sheep,
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for my master,
And one for his dame,
And one for the little boy
Who lives down the lane.



Baby, baby, naughty baby

Baby, baby, naughty baby,
Hush, you squalling thing, I say.
Peace this moment, peace, or maybe
Bonaparte will pass this way.


Baby, baby, he's a giant,
Tall and black as Rouen steeple,
And he breakfasts, dines, rely on't,
Every day on naughty people.

Baby, baby, if he hears you,
As he gallops past the house,
Limb from limb at once he'll tear you,
Just as pussy tears a mouse.

And he'll beat you, beat you, beat you,
And he'll beat you all to pap,
And he'll eat you, eat you, eat you,


Baby Story

The Rabbit Ears.
     
 Once upon a time there lived a little rabbit with large dropping ears. All the other rabbits laughed at him. The little rabbit was very sad. It met a wise old elephant. The elephant said the rabbit ears were just perfect. The little rabbit ran to meet its friends. It told what the elephant said. All the other rabbits stopped teasing and the rabbit lived happily together.

Greedy Dog.
     
Once a dog was crossing in the bridge with a bone in its mouth. It looked into the water. It saw his own shadow and thought another dog in the water. it barked at the dog bow wow bow wow, and the bone fell into the water. the dog last the bone and went away sadly.

Tuesday, January 22, 2013

Vikram Prabhu Wedding Photos for all




பிரியாணி


வெஜிடேபிள்  பிரியாணி

தேவையான பொருட்கள்  : பாசுமதி ரைஸ் - ஒரு ஆழாக்கு, நறுக்கிய  காரட், உருளைக்கிழங்கு - 2தலா , பச்சைப்பட்டாணி - 50 கிராம், புதினா கொத்தமல்லி - சிறிதளவு - 1/4   கப் , நறுக்கிய  வெங்காயம் தக்காளி - தலா 2, கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் , மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் , - மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை , மராத்தி மொக்கு - தலா 2,   இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : எண்ணையில் பிரியாணி இலை , மராத்தி மொக்கு  தாளித்து வெங்காயம் , தக்காளி உட்பட எல்லா காய்கறிகளையும் பிறகு வதக்கவும். [பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள்,  கரம் மசாலா , உப்பு, தயிர்   எல்லாவற்றையும் விட்டு   மறுபடியும் வதக்கவும். 1இதில் 10 நிமிடம்  ஊற வைத்த  அரிசியையும் அரிசியையும் போட்டு வதக்கவும். பிறகு 11/2 ஆழாக்கு தண்ணீர்   விட்டு 2   விசில் வரும் வரை வேக விடவும். வெந்ததும் அரை மூடி லெமன் பிழிந்து புதினா கொத்தமல்லி தூவி
பரிமாறவும்.இதுதான் பாரம்பரிய வெஜிடேபில் பிரியாணி .

சைனீஸ் ப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்  : பாசுமதி ரைஸ் - ஒரு ஆழாக்கு , நறுக்கிய காரட் - 2, குடை மிளகாய்  - 2, பெரிய வெங்காயம் - 1,  - பச்சைமிளகாய் - 2, வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், அஜினமோட்டோ - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை : அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு , களைந்து  உடனே  எடுத்து விடவும். பிறகு அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து வடித்து ஆற விடவும் . குக்கரில் எண்ணையை  வைத்து அதில் நறுக்க்ய காய்கறிகள் , வெங்காயம் அஜினமோட்டோ, உப்பு, மிளகுத்தூள் ஆகியவைகளை போட்டு நன்கு வதக்கவும். காய்கறிகள் வதங்கி வெந்ததும் பாதி வெந்த சாதத்தை போட்டு கலந்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை விடவும். அல்லது 5 நிமிடம் தம் போடவும்  .

தக்காளி காரட் புலாவ்

தேவையான பொருட்கள்  : பாசுமதி ரைஸ் - ஒரு ஆழாக்கு, தக்காளி - 1/4 கிலோ , கேரட் - 2, பூண்டு - 10 பல் , பட்டை, லவங்கம் - தலா 2, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் , மிளகாதூள் - 3/4 டீஸ்பூன் , பெரிய வெங்காயம் ௨, டால்டா - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை : குக்கரில் டால்டாவை காய வைத்து பட்டை லவங்கத்தை தாலியுங்கல். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காலி, கேரட், பூண்டு ஆகியவைகளைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு 21/2 ஆழாக்கு தண்ணீர், களைந்து வைத்துள்ள அரிசி இரண்டையும் பொட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும்.

பிசிபேளாபாத்

நீளவாக்கில் நறுக்கிய 2 காரட் , 2 உருளைக்கிழங்கு , 2 முருங்கைக்காய் , 2 கத்திரிக்காய் , 250 கிராம் பச்சை பட்டாணி 100 கிராம் சாம்பார் வெங்காயம் எல்லாவற்றையும் தனியாக வேக வைக்கவும்

      5 காய்ந்த   மிளகாய், ஒரு டீஸ்பூன் தனியா - 1/4 கப் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய் , 1/2 டீஸ்பூன் மிளகு ஆகியவைகளை நெய்யில்  வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும் .

     3/4 ஆழாக்கு பாசுமதி ரைஸ், ஊற வைத்த 1/2 ஆழாக்கு துவரம் பருப்பு , 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  மூன்றையும் , 3 விசில் வரும் வரை வேக வைத்து,   மத்தால் மசிக்கவும்.

   எலுமிச்சை அளவு   புளியை கரைத்து கொதிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து கடுகு பட்டை லவங்கம்  கறிவேப்பிலை  நான்கையும் தாளிக்கவும் இதில் வெந்த காய்கறி  அரைத்த் மசாலா, புளிக்கரைசல்  குழைந்த சாதம் எல்லாவற்றையும் கலந்து சுடசுட  சாப்பிடுங்கள்.

தொக்கு


எலுமிச்சம்பழத் தொக்கு :

தேவையானவை : எலுமிச்சம்பழம் - 10, மிளகாய்த்தூள் - 100  கடுகு, பெருகாயத் தூள், மஞ்சள்தூள் - சிறிது, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : எலுமிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும் பிறகு மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடையில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழ விழுதைச் சேர்த்துக் கிளறி வைக்கவும்.

பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

மாங்காய் இஞ்சி தொக்கு :

தேவையானவை  : மாங்காய் இஞ்சி - கால் கிலோ , எலுமிச்சம்பழம் - 6, கடுகு, பெருங்காயத்தூள் , மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் , உப்பு - தேவையான அளவு 

செய்முறை : மாங்காய் இஞ்சியைக் கழுவி,   தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பெருங்காயத்தூள்  தூவவும் .அரைத்து வைத்திருக்கும் மாங்காய் இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும் இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு போட்டு எழுமிச்சம்பலச் சாறு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் 

 பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 


எலுமிச்சம்பழத் தொக்கு :

தேவையானவை : எலுமிச்சம்பழம் - 10, மிளகாய்த்தூள் - 100  கடுகு, பெருகாயத் தூள், மஞ்சள்தூள் - சிறிது, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : எலுமிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும் பிறகு மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடையில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழ விழுதைச் சேர்த்துக் கிளறி வைக்கவும்.

பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

மாங்காய் இஞ்சி தொக்கு :

தேவையானவை  : மாங்காய் இஞ்சி - கால் கிலோ , எலுமிச்சம்பழம் - 6, கடுகு, பெருங்காயத்தூள் , மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் , உப்பு - தேவையான அளவு 

செய்முறை : மாங்காய் இஞ்சியைக் கழுவி,   தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பெருங்காயத்தூள்  தூவவும் .அரைத்து வைத்திருக்கும் மாங்காய் இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும் இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு போட்டு எழுமிச்சம்பலச் சாறு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் 

 பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

மிளகாய்பழத் தொக்கு :

தேவையானவை : மிளகாய்பழம் - கால் கிலோ, புளி - 125 கிராம், கடுகு, வெந்தயம் மஞ்சள்தூள், வெள்ளம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகுப்போடி, வெந்தயப்பொடி - தலா 25 கிராம் முழு பூண்டு - 2 (கரகரப்பாக இடித்து கொள்ளவும்.), நல்லெண்ணெய் - உப்பு தேவையான அளவு .

செய்முறை : மிளகாயை சுத்தம் செய்து 2, 3 துண்டுகளாக நறுக்கவும். புலியுடன் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய மிளகாயை சேர்க்கவும். 2 இதை நாட்கள் ஊற வைத்து மிக்சியில் நைசாக அரைத்து இடித்த பூண்டு, கடுகுபோடி வெந்தயபொடி , வெல்லம் சேர்த்துக் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து பெருங்காயத்தூள்  சேர்க்கவும் இதை மிளகாய்ப்பழ கலவையுடன் சேர்த்துக் கலக்கவும் 
ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் தொக்கு :

தேவையானவை : பெரிய நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 50 கிராம், புலி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு, கடுகு , பெருங்காயம், கறிவேப்பிலை மஞ்சள்தூள் - சிறிதளவு , கடுகுபொடி - 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : நெல்லிக்காய்கலைக் கழுவி துடைக்கவும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு  குக்கரில் வைத்து வெய்ட் போடாமல் 15   வைக்கவும். பிறகு எடுத்து ஆற வைத்து, கொட்டைகளை நீக்கி புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (புளியை கரைத்தும் கொள்ளலாம் )

கடாயில் எண்ணெய ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, அரைத்த விழுது மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, சேர்த்துக் கிளறவும். கடைசியாக கடுகுப்பொடியைச் சேர்த்து  கிளறி 
 மூன்று மாதங்கள் வரை நன்றாக  இருக்கும்.

கொத்தமல்லி  தொக்கு :

தேவையானவை : கொத்தமல்லி கட்டு - 2 (பொடியாக நறுக்கவும் ), புளி -  ஆரஞ்சு பழ அளவு, காய்ந்த மிளகாய் - 50 கிராம் , துருவிய வெள்ளம் - ஒரு டீஸ்பூன் , கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகுப்பொடி,  வெந்தயப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : புளி, மிளகாயில் சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்து , கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து , அரைத்த விழுதைச் சேர்க்கவும். நன்றாக  வதங்கியதும் உப்பு வெல்லம் சேர்த்து மேலும் வதக்கி ஈரம் வற்றி கெட்டியாக வந்ததும் இறக்கி கடுகுப்பொடி, வெந்தயப்பொடி சேர்த்துக் கிளறவும்.

இரண்டு மாதம் வரை நன்றாக இருக்கும் .

கண்


 கண் எரிச்சல் நீங்க :

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளிபெறும்.

கண் பிரகாசம் அடைய :

தூது வளைகாய் ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளிபெறும்.
கண் நோய் : முருங்கை கீரை சாப்பிட கண் நோய் தீரும்.

கரு  வளையம் : கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையம் நீங்க உருளை கிழங்கை நன்றாக அரைத்து கண்களில் பூச கருவளையம் மறைந்து கண்கள் அழகுபெறும்.

கண் அயர்வு :  நாம் வெகு நேரம் கணினி அல்லது தொலைகாட்சி பார்க்கும் பொழுது கண்கள் அயர்ந்து விடும் அப்பொழுது சிறிது நேரம் கண்களை மூடியோ, அல்லது பசுமையான செடி, கொடிகளையோ பார்த்தால்  கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும்  

கண் குளிர்ச்சி அடைய : வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தலையில் தேய்த்து குளிக்க கண்கள் குளிர்ச்சி பெரும். சுருசுறுப்பாகவும்  இருக்கும் . 

கண் கட்டி மறைய : வெயில் காலங்களில் கண்களில் உண்டாகும் கட்டியை நாம் கை வைத்து பெரிதாக்கி விட கூட்டு அதில் நாமக்கட்டியை கண்ணில் படாமல் தடவ வேண்டும்.

யோகா : சிறு சிறு யோகா பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்களின் பவர் ஒரே நிலையில் இருக்கும்.

மேக்கப் : கண்களில் போடும் மேக்கப்பை  தூங்கும் முன் கண்டிப்பாக கலைத்து விட வேண்டும். குளிர்ந்த  நீரில் கண்களை கழுவுவது மிகவும் நல்லது. 

கண்ணாடி : வெயிலில் செல்பவர்கள் கூலிங்க்ளாஸ்  அணிந்து சென்றால் கண்களில் ஏற்படும் பாதிப்பு குறையும்.

தூக்கம் : தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். கண்களுக்கு ஈரத்தன்மை தூக்கத்தில் மட்டுமே கிடைக்கும்.

வெளிச்சம் :  சரியான வெளிச்சத்தில் மட்டுமே நாம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

லென்ஸ் : பெண்கள்   ஹேர்ஸ்ப்ரே செய்யும் போது கண்களில் லென்ஸ் அணிய கூடாது. 

சத்துணவு : வைட்டமின் ஏ சத்துள்ள பொருள்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதாவது கீரை, காரட், பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பால் மற்றும் பால் வகை பொருள்கள், மாமிசம் போன்றவற்றில் இந்த சத்து உள்ளது .

கண் இமை : கண்  இமை  மீது ஒரு ஈரத் துணியை  ஒத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  

கருவளையம் :  பாதாம் பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பேக்  போடுவதால் கருவளையம் மறையும் 

கண் மை : முடிந்த வரை கண் மை வீட்டில்  தயார் செய்வதே நல்லது. 

அவசர சமையல் ஐந்து


அவசர ரசம்

ரசப்பொடி : மிளகு சீரகம் தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். 100 கிராம் காய்ந்த மிளகாய், 100 கிராம் க.பருப்பு 5 கிராம் கட்டிப் பெருங்காயம், ஒரு கைப்பிடி கறிவேப்பில்லை எடுத்துக் கொண்டு அனைத்தையும் டிரையாக வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இப்பொடியை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

தேவையானவை : ரசப்பொடி     - ஒரு ஸ்பூன்
                 புளிபேஸ்ட்  - ஒரு டீஸ்பூன்
                 தக்காளி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்            
                  எண்ணெய் கடுகு - தாளிக்க            
                 ம தூள் - 1/4 டீஸ்பூன்
                 உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை : ஒரு டம்ளர் தண்ணீரில் ரசப்பொடி, புலி பேஸ்ட், தக்காளி பேஸ்ட் கரைத்து கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து மஞ்சள் தூள், உப்பு  போட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் மல்லி கறிவேப்பிலை தூவி இறக்கி, கடுகு தாளித்துக் கொட்டவும். வேண்டுமானா கொதிக்கும் போது 2 பூண்டுப் பல் தட்டிப் போடவும்.
                                           
அவசர சாம்பார்

சாம்பார் பொடி : ஒரு ஆழாக்கு து.பருப்பு, 2 கைப்பிடி காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 5 கிராம் கட்டிப் பெருங்காயம், 2 டீஸ்பூன்   தனியா இவைகளை வறுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சாம்பார் பொடிதயார் . ஒரு மாதம் வரை தாங்கும்

தேவையானவை : தேவையான காய் - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன். ம. தூள் - 1/4டீஸ்பூன். புலி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன் , உப்பு  கறிவேப்பிலை தேவையான அளவு, கடுகு, எண்ணெய் - தாளிக்க.

செய்முறை :     தேவையான காயை முதல்நாளே சுத்தம் செய்து கட் செய்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காயை ப்ரசர் குக்கரில் வேக வைத்து விட்டு வாணலியில் கடுகு  தாளித்து ஒரு டம்ளர்  தண்ணீர் விடவும் அதில் புளிபேஸ்ட் சாம்பார்பொடி, ம.தூள், உப்பு போட்டு ஓரூ கொதி வந்தவுடன் வேகவைத்த காய், கொத்துமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும் காய் வேண்டாம் என்றால் தக்காளி மட்டுமே சேர்த்தும் செய்யலாம்.

அவசர குருமா

குருமா பொடி : ஒரு கைப்பிடி மிளகு, 2 கைப்பிடி தனியா, தலா 5 கிராம் பட்டை லவங்கம் ம.தூள் சேரத்து வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும் .

தேவையானவை:  குருமா மசாலா போடி - ஒரு டீஸ்பூன், பனீர் - 50 கிராம், ஸ்டார் செய்த தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், போட்டுக் கடலை - ஒரு டீஸ்பூன், தக்காளி பேஸ்ட் - 2 டம்ளர் , உப்பு, எண்ணெய்  - தேவையான அளவு .

செய்முறை : வாணலியில் எண்ணெய்விட்டு , பனீர் துண்டுகளைப் பொரிக்கவு பின் தண்ணீர் விட்டு தக்காளி பேஸ்ட், குருமா பொடியைப் போடவும். தேங்காய் துருவல், போட்டுக் கடலை இரண்டையும் மிக்சியில் அரைத்து அத்துடன் கலந்து உப்புப்போட்டு கிரேவி திக்கானதும் இறக்கவும்.



அவசர வெஜிடேபிள் ரைஸ்

பிரியாணிப் பொடி:   மிளகாய் வற்றல் 2 கைப்பிடி, தனியா ஒரு கைப்பிடி, ம.தூள் 5 கிராம், இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இதனை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.

தேவையானவை : ரைசுக்கு தேவையான காய்கறிகள் - 150 கிராம், அரிசி - ஒரு டம்ளர், கரம் மசாலா -  ஒரு டீஸ்பூன் , சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன் , இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன் , எண்ணெய் கடுகு , கறிவேப்பிலை - தாளிக்க, பிரியாணிப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : காய்கறிகளை முதல்நாளே கட்செய்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் அடுப்பில் காய்கறிகளை வேகவைக்கவும் மறு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் அதற்குள் காய்கறி அரை வேக்காடு வெந்திருக்கும் அந்தக் காயை எடுத்து இத்துடன் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அரிசியையும் கொட்டி வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கரம் மசாலா, பிரியாணிப் போடி, சாம்பார் போடி, உப்பு போட்டு பிரஷர் குக் செய்யவும் 5 நிமிடத்தில் விசில் வரும் இறக்கி லெமன் ஜூஸ் விட்டுக் கிளறி பரிமாறவும்.

அவசர பனீர்  ரைஸ்

கரம் மசாலா : தலா 50 கிராம் பட்டை, லவங்கம் அன்னாசிப் பூ, 3  பிரியாணி இலை, தலா 10  சோம்பு சீரகம் இவைகளை டிரையாக வறுத்து ப பொடித்துக் கொண்டால் கரம்மசால ரெடி. ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்

தேவையானவை :  சாதம் ஒரு கப்,  பனீர் - அரை கப் , கரம் மசாலா - ஒரு டீஸ்பூன் , உப்பு, எண்ணெய் , லைம் ஜூஸ் - தேவையான அளவு.

செய்முறை :  சாதத்தை முதல் நாளே எடுத்து பிரிட்ஜில் வைக்கவும். மறுநாள் வாணலியில் எண்ணெய்விட்டு பனீரை வதக்கவும். இத்துடன்  சாதத்தை கொட்டி கரம் மசாலா, உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் இறக்கி லைம் ஜூஸ் 5 சொட்டுக்கள் விட்டுக் கிளறி பரிமாறவும்.

குறிப்புகள் ஆயிரம்


16. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.

17. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு  புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

18. சமையல் பாத்திரத்தின் உள்ளே கரி பிடித்திருந்தால் வெந்நீரில் சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு கரி பிடித்த பாத்திரத்தினுள் ஊற்றி சில நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பாத்திரம் பளிச்சிடும்.

19. ஆரஞ்சு பழத்தோலை போடியாக்கி ரசத்துடன் சேர்த்துப் பாருங்கள் மனமும் சுவையும் கூடும் .

20. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை ) விட்டு குப்பை கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்

21. இஸ்திரி பேட்டியின் அடியில் உள்ள பிரவுன் கரையை போக்க கரையின் மேல் சமையல் எண்ணெயை தடவி அப்படியே ஆன் செய்து விடவும் சிறிது நேரம் கழித்து ஆப் செய்து ஈரத்துணியால் துடைத்தால் பிரவுன் கரை போய் விடும்.

22. வெள்ளை கேன்வாஸ்  ஷூக்களை நான்கு சொட்டு நீளம் சேர்த்து பாலிஷ் செய்தால் மஞ்சள் நிறம் மாறிபுதியது போல் ஆகும்.

23. வெள்ளைக் கலர் டெலிபோன் ஆளுக்கு பிடித்திருந்தால் நெயில் பாலிஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

24. மிக்சியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்

25. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகொலனைத் தடவி பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை  தூக்கும்.

26. துடைப்பம் உபயோகப்படும் போது மேல், கீழ் வழியாக குச்சி   இருக்க,பழைய சாக்ஸை மேலே நுழைத்து கட்டிவிட்டால் பல காலம் துடைப்பம் உழைக்கும்

27. சிறிது டால்கம் பவுடரை ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் ரப்பர் பேன்ட் ஒன்றோடு ஒன்று ஒட்டாது

28. வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் நறுக்கும் பொது கண்ணீர் வராது: சுலபமாக உரிக்கலாம்.

29. ராக்கிக்கு  வண்ணக் கயிறு பட்டையை நிறைய வாங்கி கொளுப்படியின் பார்டரில் கலர் மாற்றி மாற்றியோ ஒரே கலரிலோ வாங்கி ஒட்டவும். பளபளப்பான ராக்கி கயிறு காற்றில் ஆடும் போதும் சுற்றும் போதும் நட்சத்திரம் வீட்டிற்குள் வந்தது போல் இருக்கும்.

30. துணி அயர்ன் செய்யும் பொது ஜரிகை உள்ள  சேலையாய் இருந்தால் உடம்பில் ஜரிகை படாமல் அயர்ன் செய்ய வேண்டும் . ஜரிகை மூலம் ஷாக் அடிக்க சான்சே உண்டு

புது குறிப்புகள்


1. வெள்ளிப் பாத்திரங்கள் உள்ள பையில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் வெள்ளி கருக்காது.

2. சமையல் மேடையில் காஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரெசின் இரெண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சென் பளிச்சென்று இருக்கும் .

3. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கரையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப் பொலிவுடன் இருக்கும்

4. வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் ப்ரெஷாக இருக்கும்.

5. பிரிட்ஜில் ஆப்பிள், காராட் இரெண்டையும் ஒரே கம்பார்ட்மென்ட்டில் வைக்காதீர்கள் ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒருவித வாயு காரட்டய் கசக்கச் செய்து விடும்.

6. பீன்ஸ் அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ்  சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்து விடும்.

7. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து  வெட்டினால் கண்கள் எரியாது

8. சமையல் செய்யும் போது அதிகமாக தண்ணீர் விட்டு காய்கறிகளை வேக வைக்கக் கூடாது. காய்கறிகளின் வைட்டமின் சத்துக்கள் காணாமல் போய் விடும். காய்கறியின் மணமும் போய் விடும்.

9. உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து விட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்க உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்து விடும்.

10. பச்சை நிற காய்கறிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிறம் மாறிவிடும். இதனைத் தவிர்க்க அந்த காய்கறிகளின் மீது எலுமிச்சை பலச் சாற்றை வாற்றினால் சில நாட்கள் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

11. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும் , பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை   துடைத்து விட்டால், மேஜை பபப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது .

12. காய்ந்த மிளகாயை வருக்கும் போது, வரும் நெடி நம்மை கஷ்டபடுத்தும். அதை தவிர்க்க மிளகாயுடன் சிறிது உப்பு போட்டு வறுத்தால் இருமல் நெடி ஏற்படாது.

13. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான  நனைத்து மரச் சாமான்ம்களை  வார்னிஷ் செய்தது  போல இருக்கும்.

14. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் இரும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு.வராது

15. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு  மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

குறிப்புகள்


1. இஞ்சியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். தண்ணீரை ரெண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே வாருங்கள்.  நீங்கள் வைத்திருக்கும் இஞ்சி நீண்ட நாள்  கெடாமல் இருக்கும்.

2. ஒரு   டப்பாவில் சிறிதளவு சர்க்கரை தூவி அதனுள் பிஸ்கட் வையுங்கள். பிஸ்கட் நீண்ட  கெடாமல் இருக்கும்.

3. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னாள்  சிறிதளவு உப்பை தடவிக்  கொண்டால்  கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

4. ஸ்கெட்ச் பென் கறையை போக்க  அசிடோன் (  நெயில் பாலிஷ் ரிமூவர்) தடவினால் போதும். கறை  மறைந்து விடும் .

5.வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணமல் போய்விடும்.

6.உருளைக்  வாய்த்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

7. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன்  எடுத்து விட்டு பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வையுங்கள்  நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

8. அரிசி மற்றும் காய் கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

9. ஒரு கைப்பிடி கல் உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி மூட்டைக்கு   அருகில்  வைத்தால்  பூச்சிகள் எதுவும் அரிசியை அண்டாது.

10. மிதியடிக்கு அடியில் அதே அளவில்  பழைய நியூஸ் பேப்பரை வைத்து விட்டால், மிதியடிகள் அழுக்கு  எல்லாம் பேப்பரில் போய்விடும்.

11.பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

12.காலிப்ளவேர் சமைக்கும் போது  ஒரு துளி பால் சேர்த்தால் பூ   போன்ற வெள்ளை கலர் மாறாமல்  இருக்கும். பச்சை வாடையும் வராது.

13.இட்லி மாவு  புளிக்காமல் இருக்க,வெற்றிலையை காம்பு கில்லாமல் மாவுப் பாத்திரத்தில்   குப்புற இருப்பது போல ரெண்டு வெற்றிலையைப் போடவும். ரெண்டு நாட்களுக்கு பொங்காமலும், புளிக்காமலும் இருக்கும்.

14. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டிபோலாகிவிடும் . இப்படி ஆகாமளிருக்க பெருங்காய டப்பாவில் பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் போடுங்கள். பெருங்காயம் அப்படியே இளகி பஞ்சு போல் ஆகிவிடும்.

15.ரவா, மைதா, அரிசி ஆகியவற்றில் பூச்சி புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பு தட்டி இந்த பொருள்கள் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் தலை காட்டாது

16.பிரிட்ஜே, ஸ்டோர் ரூம், பாத்ரூம், என கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை அங்கங்கு வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

17.காய்ந்த எலுமிச்சை தோளை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.

18.புளித்த மாவாக இருந்தால் கடுகு, பெருங்காயத்தைப் பொரித்து கொட்டி மல்லி, கருவேப்பில்லை, ஒரு ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் உப்பு சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் ரவா மைதா கொஞ்சம் சேருங்கள். வெங்காயம் மிளகாய் சேர்த்து தோசை வார்த்தல்  தெரியாது . தோசையும் சுவையாக இருக்கும்

19.வெள்ளை துணிகளில் எம்ப்ரொஇடர்ய் செய்யும் பொழுது அழுக்காகாமல் இருக்க கைகளில் முகம் பூசும்  பௌடரை பூசி இருந்தால் அழுக்காகது.

20.சமையல் அறையில் எலுமிச்சை பழச்சாற்றினால் ஏற்படும் வெள்ளை கரையை சிறிது வெண்ணையை அதில் தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தால் தரை பளிச்சென்று இருக்கும்.